தமிழ் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

download-4-13.jpeg

மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு; சிங்கள – தமிழ் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் அனைத்து கலால் அனுமதி பெற்ற மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேவேளை இலங்கை சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று நட்சத்திர அதற்கு மேற்பட்ட உரிமங்களுடன் ஹோட்டல்கள் மற்றும் சிறப்பு வில்லாக்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே மது வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *