தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று

download-2-13.jpeg

தேசபந்து தென்னகோனுக்கு பிணை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

இன்று அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *