4 கஜமுத்துக்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்

download-1-77.jpeg

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் 4 கஜமுத்துக்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (30) இரவு 7.00 மணியளவில் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி பொ. ரத்நாயக்கா தலைமையிலான குழுவினர் குறித்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 4 கஜ முத்துக்களை மீட்டுள்ளனர்.

இதில் கைதுசெய்யப்பட்வரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *