இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் வெடித்து சிதறிய எரிமலை

download-6-32.jpeg

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை – விமான சேவைகள் இரத்து இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்துள்ளமையால் அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மூன்று முறை இந்த எரிமலை வெடித்துள்ளதாகவும், அதில் இருந்து சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. எனவே அவுஸ்திரேலியா-இந்தோனேசியா இடையே செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *