இன்று பிற்பகல் இலங்கையை உறைய வைத்த மற்றுமொரு விபத்து-மாணவர்கள் உட்பட பலரின் நிலை கொழும்பு – குருணாகல் பிரதான வீதியில் நால்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
