400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

download-2-48.jpeg

கடற்படையினரின் உதவியுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மட்டக்குளியில் கேரள கஞ்சா தொகை ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று படகுகளும் விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தொகை 400 கிலோ கிராம்களை அண்மித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குறித்த கேரள கஞ்சா தொகை 185 பொட்டலங்களாக பொதியிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

கேரள கஞ்சா தொகை வெளிநாடு ஒன்றில் இருந்து நீர்கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மட்டக்குளிக்கு படகு மூலம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போதைப் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனை
பரந்தன் பகுதியில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *