வாராஹி அம்மன், பிரத்தியங்கரா தேவி, மகாகாளி

491472149_994503832827318_2984500222616431027_n.jpg

தேய்பிறை பஞ்சமி அன்று உக்கிர தெய்வங்களான வாராஹி அம்மன், பிரத்தியங்கரா தேவி, மகாகாளி, உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் ஏற்படக்கூடிய இன்னல்களை போக்கும், எதிர்மறையாற்றல், கண் திருஷ்டி, போன்றவை விலகும் என்பதோடு மட்டுமல்லாமல் ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய தோஷங்களையும் போக்கும்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு பிறகு வரும் ஐந்தாவது நாள், தேய்பிறை பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. பஞ்சமி திதி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.

பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு நிலம் கடன் மற்றும் எதிரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவும். நீண்ட காலமாக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பஞ்சமி அன்று வாராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

ஆலயங்களில் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி அன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் பொதுவாகவே மாலை 6 மணிக்கு மேல் அதாவது சூரிய அஸ்தமனமான பிறகு தான் நடக்கும்.

வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று மாதுளை பழம், செவ்வரளி பூக்கள் ஆகியவற்றை அம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கு ஏற்றலாம்.

ஒற்றைப்படை எண்ணிக்கையில் விரலி மஞ்சளில் மாலை கட்டி, அதை கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு சாற்றலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வராகி அம்மன் படத்திற்கு முன்பு, புதிய அகல் விளக்குகளை வாங்கி நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றலாம்.

வீட்டில் எந்த வழிபாடு செய்தாலும், தீபம் ஏற்றுவதோடு மட்டுமில்லாமல், ஏதேனும் ஒரு உணவை அல்லது இனிப்பை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.

வாராஹி அம்மனுக்கு அவல், வெல்லம், பானகம், சர்க்கரை பொங்கல், கரும்புச் சாறு, தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாதுளை, போன்றவற்றை நைவேத்தியமாக வைக்கலாம்.

The current image has no alternative text. The file name is: 491472149_994503832827318_2984500222616431027_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *