இவ்வளவு காலமாக திறக்காத வீதி தேர்தல் வரும்பொழுது மட்டும் திறப்பதற்கு காரணம் என்ன

488760725_987938486817186_5440285659525078337_n.jpg

பின்னர் இன்று மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏசுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,வரவேற்கின்றோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா?இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை. மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதிவழங்கியது.ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. அதனை விட முக்கியமான கேள்வி ? தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? எனவும் சுமந்திரன் பதிவிட்டுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *