பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எஸ்.எஃப் சரத்துக்கு மரண தண்டனை 2014ஆம் ஆண்டு பொரளை பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்ற கே.எம். சரத் பண்டார எனப்படும் எஸ்.எப். சரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
இந்த வழக்கில் இணை குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்த தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவி ஜயநாத் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி பொரளை வனாத்தமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு நிலையமொன்றில் ஹெட்டியாராச்சியின் துமிந்த நமட்டக்கு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
