காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆக பதிவு

download-2-60.jpeg

கடந்த வருடத்தில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆக பதிவு கடந்த வருடம் நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நேயாளர்களில் 5,291 ஆண்கள் 3,259 பெண்கள் மற்றும் 250 குழந்தை இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் பதிவான குழந்தை பருவ காசநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 250 ஆகும். அதிகமாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2035 ஆம் ஆண்டுக்குள் காசநோயாளிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்தாலும் காசநோயினால் ஏற்படும் இறப்புக்களை 95 சதவீதத்தாலும் குறைப்பதே எமது நோக்கமென சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் இருமல் லேசான காய்ச்சல், உடல் எடை இழப்பு ,பசியின்மை , இரவில் வியர்த்தல் , சோர்வு மற்றும் உடல்நலக் குறைவு ஆகியவை காசநோயின் அறிகுறிகள் ஆகும்

இந்த நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்கள் உடனடியாக வைத்திய உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *