லண்டனின் ஹீத்ரோ தீ விபத்தை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

download-3-37.jpeg

தீ விபத்தை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது
லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் விமானநிலையம் மீண்டும் திறக்கப்படும் வரை எந்த காரணம் கொண்டும் பயணிகளை அங்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஹெய்ஸ் என்ற பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் மூண்ட தீ காரணமாக 16300 வீடுகளிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் 150 பேர் வரை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *