பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் கைது தெல்லிப்பழை பகுதியில் நேற்று (18) பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததையடுத்து தெல்லிப்பழை பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
