அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

download-1-42.jpeg

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்தது.

இந்த அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக, அரசாங்கம் மனுதாரருக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பேலியகொட சிறப்பு விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட, ஹேனகம, பொகுனுவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும என்ற பெண்ணொருவர் சமர்ப்பித்த அடிப்படை உரிமைகள் மனுவின் தீர்ப்பை வழங்கி, உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *