தென்னகோனை நான் மறைத்து வைத்திருக்கின்றேனா சாகல ரத்நாயக்க கேள்வி தேசபந்து தென்னகோனின் நியமனம் எனது அழுத்தம் காரணமாக காலம் தாழ்த்தப்படுவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது.
ஆனால் நான் அவரை மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.இவை அனைத்தும் கற்பனை கதைகளாகுமென முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்கச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வேட்புமனு தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும் கொழும்பு மாநகரசபையில் பொது வேட்பாளரொருவரை களமிறக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களையும் அடிப்படையாகக் கொண்டே எவ்வாறு தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
