கானா பாடகி மீது அவதூறு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கானா பாடகி இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்காலத்தில் சாதி ரீதியாகவோ, பெண்களுக்கு எதிராகவோ சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட மாட்டேன் என்ற உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.
சுவாமி ஐயப்பனை பற்றி அவதூறாகப் பாடல் பாடியதாக கானா பாடகி இசைவாணிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
