இன்றைய வானிலை 09/03/2025. Pothikai.fm.

download-27.jpeg

இன்றைய வானிலை 09/03/2025. Pothikai.fm.
2025.03.09
நாட்டில் நிலவுகின்ற வறட்சியான வானிலையில் தற்காலிகமாக மாற்றம் ஏற்பட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின் பல இடங்களில் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
காலி, மாத்தறை , களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
கடல் பிராந்தியங்களில்
***************************
திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *