1 கோடி ரூபாய் பெறுமதியான பீடி இலைகளை ஏற்றிய லொறியுடன் கடோல்கலே

download-5-15.jpeg

நீர்கொழும்பு, குட்டிதூவ பகுதியில் கடற்கரை அருகில் வைத்து 1 கோடி ரூபாய் பெறுமதியான பீடி இலைகளை ஏற்றிய லொறியுடன் கடோல்கலே , தலாதுவ பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

குட்டிதூவ பகுதியில் சிறைச்சாலைக்குப் பின்னால் உள்ள கடற்கரை அருகில் குற்றப் புலனாய்வுத் துறை பிரிவினர் லொறியை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 2350 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *