அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம் டிரம்ப் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்

download-6-14.jpeg

அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்

இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, `ஈரானுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் நாம் இராணுவத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்’ என்றார்.

இந் நிலையில் டிரம்ப் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

”சில மிரட்டல் அரசாங்கங்கள் பேச்சுவார்த்தையை வலியுறுத்துவது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அல்ல. அவர்களின் புதிய கோரிக்கைகளை முன்வைப்பதற்கான ஒரு பாதையாகும்.

ஈரானால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படாத புதிய கோரிக்கைகளை அவர்கள் எழுப்புகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை ஈரான் நிச்சயமாக ஏற்காது.

பேச்சுவார்த்தைகளில் ஈரானை மிரட்ட முடியாது. வற்புறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு எதிராக நிற்போம்.” என தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச நாடுகள் இணைந்து கொண்டுவந்த ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் பலவீனமானது எனக்கூறி அமெரிக்கா விலகியது.

அதன்பின் ஈரான் ஒப்பந்தத்தில் இருந்த உறுதி மொழிகளைத் திரும்பப்பெறத் தொடங்கியது. இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *