ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்பதை தாம் அறிவதாகவும்

download-2-11.jpeg

ஈஸ்டர் தாக்குதலில் மூளையாளியை எனக்குத் தெரியும் – ஞானசார தேரர் ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்பதை தாம் அறிவதாகவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிப்பதாகவும் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று (6) காலை கண்டியில் உள்ள மல்வத்த மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஞானசார தேரர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“நான் இதை பொறுப்புடன் சொல்கிறேன். எனக்கு மூளையாகச் செயல்பட்டவரைத் தெரியும். ஆனால் நான் ஊடகங்களுக்குச் சொல்லவில்லை. நான் ஊடகங்களுக்கு சொல்ல முன்னர் நாட்டின் ஜனாதிபதிக்கு… மற்றும் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ளவர்களுக்குச் சொல்லுவேன்..”

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *