ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

download-2-38.jpeg

ரயிலில் மோதி நபரொருவர் பலி தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (19) அதிகாலை இடம்பெற்ற மேற்படி விபத்தில் பலத்த காயமடைந்த நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்த நபருக்கு சுமார் 65 வயது இருக்கலாம் எனவும், ஏனைய தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *