அஜித் குமார் கலந்து கொள்ள மாட்டார் என அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா

download-6-22.jpeg

பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு விழா நடத்தவுள்ள நிலையில் அந்த விழாவில் நடிகர் அஜித் குமார் கலந்து கொள்ள மாட்டார் என அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.சமூக சேவை, கலை, உள்ளிட்ட முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்தமைக்காக

ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இவை பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளாக வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதாளர்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பத்ம பூஷன் விருதுகளை அறிவித்துள்ள நிலையில் அவை அஜித் குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகிய தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பாராட்டு விழா நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *